Malarin Narumanam Song Lyrics

Malarin Narumanam Song is sung by Yazin Nizar, S. Riyaz and Aravind Srinivas. It is composed by Ghibran and the lyrics are written by Kaviko.

Malarin Narumanam Song Lyrics In Tamil

மலரின் நறுமணம் போகும் இடம்

குழலின் பாடல்கள் போகும் இடம்

அணைந்த சுடர்கள் போகும் இடம்

அது தான் நாமும் போகும் இடம்

 

மலரின் நறுமணம் போகும் இடம்

குழலின் பாடல்கள் போகும் இடம்

அணைந்த சுடர்கள் போகும் இடம்

அது தான் நாமும் போகும் இடம்

 

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்

 

மாதா கோயில் ஜெப ஒலி

பள்ளி வாசல் அழைப்பொலி

ஹிந்து ஆலய மணி ஒலி

எல்லாம் ஒன்றாய் போகும் இடம்

 

மாதா கோயில் ஜெப ஒலி

பள்ளி வாசல் அழைப்பொலி

ஹிந்து ஆலய மணி ஒலி

எல்லாம் ஒன்றாய் போகும் இடம்

 

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்

 

அந்த இடம் நம் சொந்த இடம்

அனைத்து பொருளும் வந்த இடம்

அங்கே மதங்கள் ஏதும் இல்லை

அமைதிக்கென்றும்

சேதம் இல்லை

 

அந்த இடம் நம் சொந்த இடம்

அனைத்து பொருளும் வந்த இடம்

அங்கே மதங்கள் ஏதும் இல்லை

அமைதிக்கென்றும்

சேதம் இல்லை

மதுவும் வண்டும்

வேறில்லை

கண்ணீர் புன்னகை

வேறில்லை

அதுவும் இதுவும்

வேறில்லை

அனைத்தும் ஒன்றே

உண்மையிலே

 

மலரின் நறுமணம் போகும் இடம்

குழலின் பாடல்கள் போகும் இடம்

அணைந்த சுடர்கள் போகும் இடம்

அது தான் நாமும் போகும் இடம்

 

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம் நாம்

போகும் இடம்

 

Leave a Comment